
வேதனை வேடிக்கை ஆவதென்ன?
வெக்கம் வேஷம் ஆனதென்ன?
வேல் பாயும் வேகத்தின் விலையென்ன?
விஞ்ஞானமே, பதில் சொல்வாயா?
SindhanaigaL. Sidhaindha KaaviyangaL. Samudhaaya KOvangaL. Naan sedhukiya kalvettugaL.
தனிமை என்பதற்கு
பகல் என்ன? இரவென்ன?
தானியங்கி தலை தாங்கும்
தன்மானம் துணை என்ன?
தள்ளாடி தடுமாறி
துலைந்தும் போவதென்ன?
தோண்டி பாருமடி
தான் என்னும் தீ என்ன?

இதை விட சாட்சிகள் வேறு வேணுமோ?
ஒன்றும் இல்லை இல்லை என்று
எடுத்துரைதீரே, அடுக்குமோ?
இத்தனை சந்தேகங்கள் தந்ததேனோ?
மனம் கொண்டேன், திருமணம் செய்தேன்
என்று, முந்தானை மடி மேல்
எடுதுரைதீரே, அடுக்குமோ?
இத்தனை பொய்கள் சொன்னதேனோ?
அவள்,மையின் குறியும் கதைகள் சொல்லும்,
மஞ்சள் வாசம் பழியும் சொல்லும்,
இதற்குமேல் நான் ஏனோ? பாவம்
மதிகெட்டேன் எனை மறந்திடு போதும்!
இதை விட சாட்சிகள் வேறு வேணுமோ?
ஒன்றும் இல்லை இல்லை என்று
எடுத்துரைதீரே, அடுக்குமோ?
இத்தனை சந்தேகங்கள் தந்ததேனோ?* inspired from one of the dance numbers I learnt recently.
முகம் திரும்பும் நேரத்தில்
குரல் ஒன்று அழைத்தது.
சொல்ல வந்த வார்த்தைகள்;
மெய் மறந்து நின்றது.
ஊமை புலம்பலாம்!
இவள் உவமை சொல்கிறாள்!
கூட்டு சோறு கட்டிக்கொண்டு
கையில் கூடை தூக்கிக்கொண்டு
யாரு இங்கே வந்தது?
ஒத்தை அடி பாதையிலே
ஓசை இல்லா நேரத்திலே
தாவணி தவழுது!
தாயகங்கள் தனிய,
திக்கி தடுமாறுது.
தென்ன மர தோப்புக்குள்ளே
நந்தவனம்; அது
தப்பி சென்ற வழி என
நம்பவேணும்.
அடி ஆத்தாடி,
மனம் காத்தாடி - போல
சுத்தி சுத்தி வந்த நேரம்
நல்ல நேரம் ஆனது.
மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.
காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.* * *
ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !
வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.
இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.
அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா
கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.
இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.
வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!