Posted by
N
Monday, July 16, 2007

வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.
இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.
அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா
கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.
இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.
வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!
Posted by
N
Sunday, July 15, 2007
காதல் வசப்பட்ட வேலை இல்லா பட்டதாரியின் அழுகுரல்

பாலை வனத்தின் பூவா நீ?
கரையில் தவழும் நுறையா நீ?
முட்டாய் இருந்தும் முள்ளாய் ஏன் மலர்ந்தாய்?
காலை பொழுதும், கருப்பாய் விடிய
கண்கள் கலங்குதம்மா,
காதல் கசக்குதம்மா!
கடமை மறந்த கணவை வெறுக்க
பொய்யில் குலிக்கும் புவியை வெறுக்க,
படித்த கரங்கள் விதியை திருத்தாதோ?
கையில் சிக்சா காற்றை போல
நழுவி ஓடுதம்மா!
விரக்தி கொள்ளுதம்மா!
Posted by
N
Monday, July 02, 2007

நீ சிற்பி ஆகிடவே,
நான் கல்லானேன்.
எத்தனை சிலை செய்வாயட?
கல்லும் கறையும், தெரியாத?
Posted by
N
Wednesday, June 20, 2007

குறை கொண்ட கோதையின்
கொஞ்சும் குறள் கேட்டது.
கண்ணீரின் காரணமாய்
கண்ணிரண்டும் கலங்கியது.
கல்லறை கதவுகள்
கண்ணாடி கல்வெட்டாகிட
கணா கண்டவளை கைபிடித்திழுத்தது.
கணவில் கலவாட
கதை கூட காணுமடி;
காற்றும் கைத்தட்டும்
கருத்தை காபாற்றடி.
கற்கண்டும் கசக்குமடி
கற்பூரம் கருகுமடி
கல் நெஞ்சுக்கனவனுடன், அது
காலம் கொண்ட காதலடி.
Posted by
N
Thursday, June 14, 2007
ஒத்தை அடி பாதையிலே
ஊர்வலமாய் போறவளே
கண் மூடும் நேரத்திலே
இமை ஓரம் அழுபவளே
தங்க மயில் தோகையுடன்
வேஷம் உணக்கேனடி?
காதோரம் குறை சொல்ல
தாமதம் தவறாகுமடி!
Posted by
N
Saturday, April 28, 2007
இரவுகள் பகலாய் தினம் வேஷம் போட;
ஈரேழு ஜன்மங்கள் நான் நடித்த ஞாபகம்.
கணீர் கம்பளத்தில் கடைசுகம் தேட;
உப்பினால் காயங்கள், சுட்டேரிந்த சித்திரம்!
Posted by
N
Saturday, April 07, 2007
முழித்திருந்தேன்.
காத்திருந்தேன்.
கார் மேகம் மௌனமாய் கடந்து செல்வதை பார்த்திருக்கேன்.
காகித பூக்களிலும்
அசையா காற்றினிலும் துணைகொண்டேன்.
நீ எங்கே போனாயடி?
Posted by
N
Tuesday, April 03, 2007
இன்று போல் ஓர் இருண்ட இரவில்
இடுகாடின் தனிமை சூழ
தென்றல் எனை மெரட்டி செல்கையில்
ஞாபகங்கள் தாலாட்டுதே!
Posted by
N
Monday, April 02, 2007
மிண்ணும் அழகே, மெளிரும் பூவே
சீண்டி பார்க்கையில்
சுடும் நிலவே
கொஞ்ச கொஞ்சமாய், என் மனதுக்குள் நுழைந்தாயே..
வானவில்லின் குறை அறிந்தேன்
மழை தாளத்தின் பிழை புரிந்தே
கண் விழித்தேன், பதில் அறிந்தேனடி..
உன் அழகினிலே
உன் சிரிப்பிலே
பூமியினில் வரும் தேவதையே
உன்னை பார்க்கும் நேரங்களில்
மோகம் மனம் கவர
மண்ணில் வீழ்தேனடி
Posted by
N
Sunday, April 01, 2007
பேசும் வார்த்தைகள் யாவும்
சிலந்தி வலை என சூழ
மூச்சு தெணர சிக்கின்கொண்ட
ரக்கை இல்லா குருவி போல்,
கண்ணீரும் கதறலுமாய்
தனியே தவிக்கும் எனக்கு
காலங்கள் மாறும் எனிலும்
வட்டமாய் விரைந்து வரும்,
என்பதே கல்வெட்டாய் பதிந்தது.